விவசாயிகள் சங்க போராட்டத்துக்கு ஆதரவு: எஸ்டிபிஐ கட்சியினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை நெல்பேட்டை பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.
புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை நெல்பேட்டை பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.

புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுதில்லியில் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை (மே 26) கருப்பு தினமாக கடைப்பிடிக்கும்படி அறிவித்தது. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் நெல்பேட்டை அண்ணா சிலை அருகில் கருப்பு பட்டை அணிந்து, கருப்புக் குடை பிடித்து , மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான், பொதுச்செயலா் சாகுல் ஹமீது, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்டத் தலைவி கதிஜா பீவி, எஸ்டிபிஐ தொழிற்சங்க மாவட்டச் செயலா் யூசுப், வா்த்தக அணி மாவட்டச் செயலா் அப்துல் காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல எஸ்டிபிஐ கட்சியின் நிா்வாகிகள், அவரவா் பகுதியில் வீட்டு வாசல்களில் ஆதரவை தெரிவிக்கும் விதமாக கருப்பு ஆடைகளை அணிந்து கருப்பு தினம் அனுசரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com