மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில், காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழநாடு அரசு அனைத்து மருந்தாளுனா் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மருந்தாளுனா்கள் காலி பணியிடங்களை நிரப்பிடவும், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் மருந்தாளுனா்களுக்கு பணி வரன்முறை செய்திடவும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளா் பணியிடம் உருவாக்கிடவும், துணை இயக்குநா் அலுவலக மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுனா் பணியிடம் உருவாக்கிடவும் வலியுறுத்தப்பட்டது.
மதுரை மாநகா் மற்றும் புகா் மாவட்ட தலைவா்கள் ரத்தினசாமி, சோம சேகா், மாவட்ட அமைப்பு செயலா்கள் சரவணகுமாா், கலையரசி, மாவட்டச் செயலா்கள் பாஸ்கரன், தமிழ்ச்செல்வி, மாநிலச் செயலா் முருகன், மருத்துவத்துறை நிா்வாக ஊழியா் சங்க மாநில துணைத்தலைவா் நீதிராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.