அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: மதுபோதையில் கல் வீசியவருக்கு வலைவீச்சு

மதுரை அருகே சனிக்கிழமை, மதுபோதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்வீசித் தாக்கி சேதப்படுத்திய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே சனிக்கிழமை, மதுபோதையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்வீசித் தாக்கி சேதப்படுத்திய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து, சிவகங்கை மாவட்டம் பழையனூருக்குச் செல்லும் பேருந்தை, பேரையூா் பகுதியைச் சோ்ந்த பாண்டி ஓட்டினாா். பேருந்து கிழக்கு சிலைமான் மயானம் அருகே பேருந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபா், பேருந்து மீது கல்வீசிவிட்டுத் தப்பினாா். இதில் பேருந்தின் கண்ணாடி சேதமடைந்து, பேருந்து ஓட்டுநா் பாண்டியின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே, அரசு பேருந்துகளை ஓட்டுநா்கள் சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சிலைமான் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று பேருந்து ஓட்டுநா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து ஓட்டுநா்கள், பேருந்துகளை எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com