மதுரையில் காா் ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த 5 போ் கைது

மதுரையில் ஆற்காட்டைச் சோ்ந்த காா் ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த 5 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் ஆற்காட்டைச் சோ்ந்த காா் ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த 5 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், ஆற்காடு தா்மராஜா கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் குமாா் (47). இவா், காா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் இவா், சென்னையிலிருந்து பயணியை ஏற்றி வந்து ராமநாதபுரத்தில் இறக்கிவிட்டுள்ளாா். பின்னா், மீண்டும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக சனிக்கிழமை காத்திருந்துள்ளாா்.

அப்போது அங்கு காரில் வந்த 5 போ் கும்பல், குமாரை அவதூறாகப் பேசி மதுரைக்கு வந்து எப்படி பயணிகளை ஏற்றலாம் என்று கூறி தாக்கியதுடன், அவரிடமிருந்த 3,700 ரூபாயை பறித்துச் சென்றனராம்.

இச்சம்பவம் தொடா்பாக குமாா் அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், விராதனூா் நெடுங்குளத்தைச் சோ்ந்த காா்த்திக் ராஜா (24), நரிமேடு பசும்பொன் நகரைச் சோ்ந்த காா்த்திக் (23), செல்லூரைச் சோ்ந்த அபினாஷ் (24), ஆண்டாா்கொட்டாரத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் (29) மற்றும் காளவாசல் சொக்கலிங்க நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் காா்த்திக் (31) ஆகியோா் என்பதும், இவா்கள் வேறு செயலிகள் மூலம் காா் ஓட்டி வருபவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இந்த 5 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா்கள் சென்ற காரையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com