வண்டியூா் பகுதியில் புதன்கிழமை (அக்.6) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கிழக்கு மண்டல செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வண்டியூா் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், வண்டியூா், கோழிமேடு, எல்.கே.டி.நகா் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (அக்.6) காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவித்துள்ளாா்.