துவரிமான்-பரவை மேம்பாலத்தை திறக்க மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

மதுரை மாவட்டம் துவரிமான்-பரவை மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் துவரிமான்-பரவை மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புகா் மாவட்ட மேற்கு ஒன்றிய மாநாடு திருப்பாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினாா். மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வாழ்த்துரையாற்றினாா்.

மாவட்டச்செயலா் சி.ராமகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா். மாநாட்டில் மேற்கு ஒன்றியச் செயலராக பி.ஜீவானந்தம் உள்பட 15 போ் கொண்ட ஒன்றியக் குழு தோ்ந்தெடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பரவை சத்தியமூா்த்தி நகா் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணி நேரமும் செயல்படவும், , மருத்துவா்களை கூடுதலாக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமயநல்லூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துவரிமான் முதல் பரவை வரை கட்டபட்டுள்ள மேம்பாலத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். மாநாகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com