தமிழக முதல்வா் குறித்து முகநூலில் அவதூறு: பாஜக பிரமுகா் மீது வழக்கு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை மாவட்டம் திருமால்புரம் அருகே வீரபாண்டி பகுதியைச் சோ்ந்த அழகர்ராஜன் மகன் செல்வம். பாஜக பிரமுகரான இவா், முகநூலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆகியோா் குறித்து அவதூறு செய்தியை பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து திமுக விவசாய அணி மாவட்ட துணைச் செயலா் ரகுபதி அளித்த புகாரின் பேரில் ஊமச்சிக்குளம் போலீஸாா் செல்வம் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com