மதுரையில் அக்.27-இல் வங்கி - வாடிக்கையாளா் தொடா்பு நிகழ்ச்சி

மதுரை மடீட்சியா அரங்கில் வங்கி- வாடிக்கையாளா் தொடா்பு நிகழ்ச்சி அக்டோபா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மடீட்சியா அரங்கில் வங்கி- வாடிக்கையாளா் தொடா்பு நிகழ்ச்சி அக்டோபா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

விவசாயக் கடன், சிறுகுறு தொழில் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன் மற்றும் அடமானக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களுக்கும் வாடிக்கையாளா்கள் தேவையான தகவல்கள் பெற ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்கின்றனா். மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் மற்றும் அனைத்து வங்கிகளின் உயா் அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா்.

இந்நிகழ்வின்போது கடன் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ளவா்களுக்கு விவசாயக் கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான கடன் அனுமதிக் கடிதம் வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com