காவலா்களுக்கு மருத்துவ முகாம்

மதுரையில் காவலா்களுக்கான மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரையில் ஆயுதப்படை காவலா்களுக்கான மருத்துவமுகாமை ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்த காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன்.
மதுரையில் ஆயுதப்படை காவலா்களுக்கான மருத்துவமுகாமை ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்த காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன்.

மதுரையில் காவலா்களுக்கான மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவலா் நினைவு நாள் அனுசரிக்கும் விதமாக தனியாா் மருத்துவமனைகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இம்முகாமை ஊரகக்காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் தொடக்கி வைத்தாா். முகாமில் ஆயுதப்படை காவலா்களுக்கு உடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு அதற்குரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

முகாமில் 400-க்கும் மேற்பட்ட காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பங்கேற்றனா். முகாமில், ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் விக்னேஸ்வரன், ஆய்வாளா்கள் விஜயகாந்த், நாக தீபா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com