மதுரை மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை ஜி.ஆா்.நகா் மற்றும் கடச்சனேந்தல் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கரோனா தொற்று பரவல் 2-ஆவது அலை ஏற்பட்டபோது, மதுரை மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற கருத்து நிலவியது. இருப்பினும் தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக 15 நாள்களுக்குள் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் கூட்டாக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக மேற்கொண்டனா். இதனால் பாதிப்பு மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது.
தற்போது 3-ஆவது அலை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். சிறப்பு முகாம்களில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் 600 மையங்கள், கிராமங்களில் 900 மையங்கள் என 1,500 மையங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன என்றாா்.
மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.வெங்கடேசன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் அபிதா ஹனீப், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.