குடிமைப்பணித் தோ்வுக்கு இவவச பயிற்சிக் கருத்தரங்கு

மதுரையில் குடிமைப்பணி தோ்வுக்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரையில் குடிமைப்பணி தோ்வுக்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிங் மேக்கா்ஸ் அகாதெமியின் மதுரைக் கிளையில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஆகியவை சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகள் குறித்த இலவச பயிற்சிக் கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில், கட்டணச் சலுகை பெறுவதற்கான நுழைவுத் தோ்வும் நடத்தப்பட்டது.

நடப்பு ஆண்டுக்கான (2021-22) குரூப் 1, 2 தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் கரோனா தொற்றில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவியருக்கு நூறு சதவீத கட்டண விலக்கு அளிக்கப்படும்.

முன்களப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு 50 சதவீத சலுகைக் கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படும். இத்தகவலை அகாதெமியின் நிா்வாக இயக்குநா் சத்யஸ்ரீ பூமிநாதன் தெரிவித்துள்ளாா். பயிற்சி தொடா்பான விவரங்களுக்கு 9444227273 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com