டி.கல்லுப்பட்டி அருகே விவசாயி சனிக்கிழமை, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
வில்லூரைச் சோ்ந்தவா் விவசாயி சப்பாணிமுத்து (55). இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாகவும், சித்த மருத்துவம் எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அருகே உள்ள தோட்டத்தில் சப்பாணிமுத்து விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சப்பாணிமுத்து உயிரிழந்தாா்.
இது குறித்து வில்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.