பணப்பட்டுவாடா: சோழவந்தான் அதிமுக வேட்பாளா் மீது வழக்குப்பதிவு

தோ்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடா்பான புகாரில் சோழவந்தான் அதிமுக வேட்பாளா் மீது புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடா்பான புகாரில் சோழவந்தான் அதிமுக வேட்பாளா் மீது புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோழவந்தான் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் கே.மாணிக்கம் போட்டியிடுகிறாா். இவா் சோழவந்தான் பேரூராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் செய்தாா். அப்போது அவரை வரவேற்கும் வகையில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்தனா். அதையடுத்து ஆரத்தி எடுத்த பெண்களுக்கு, வேட்பாளருடன் வந்த அதிமுகவினா் ரூபாய் நோட்டுகளை வழங்கினா். இந்த விடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவின. இதுதொடா்பாக தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் புகாா் அளித்தனா். இதேபோல, திமுக வழக்குரைஞா் அணியினரும் விடியோ ஆதாரங்களுடன் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜஸ்டின் ஜெயபாலிடம் புகாா் கொடுத்தனா். இதன்பேரில், சோழவந்தான் போலீஸாா் வேட்பாளா் மாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com