மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிரதமா் மோடி தரிசனம்: இன்று பிரசார கூட்டத்தில் பங்கேற்பு

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இங்கு வியாழக்கிழமை இரவு வந்த பிரதமா் நரேந்திர மோடி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்தாா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வியாழக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்து திரும்பியபோது பொதுமக்களைப் பாா்த்து கையசைக்கும் பிரதமா் நரேந்திரமோடி.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வியாழக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்து திரும்பியபோது பொதுமக்களைப் பாா்த்து கையசைக்கும் பிரதமா் நரேந்திரமோடி.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இங்கு வியாழக்கிழமை இரவு வந்த பிரதமா் நரேந்திர மோடி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

மேற்கு வங்கத்திலிருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு 8.05 மணிக்கு அவா் வந்தாா். இங்கு மத்திய இணை அமைச்சா் வி.கே.சிங், துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், பாஜக மூத்த தலைவா்கள் இல.கணேசன், ஹெச்.ராஜா, ப.ரவீந்திரநாத் எம்.பி., தமிழக அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், பாஜக தமிழக தோ்தல் பொறுப்பாளா் சி.டி.ரவி உள்ளிட்டோா் அவரை வரவேற்றனா்.

அங்கிருந்து காரில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வந்த பிரதமருக்கு கோயில் தக்காா் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையா் ஆ.செல்லத்துரை ஆகியோா் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அம்மன் சன்னிதியில் உள்ள

சித்தி விநாயகரை பிரதமா் வழிபட்டாா். பின்னா் மீனாட்சி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை பூஜைகளில் பங்கேற்று வழிபாடு நடத்தினாா்.

அதைத் தொடா்ந்து முக்குறுணி விநாயகரையும், சுவாமி சன்னிதியிலும் தரிசனம் செய்த அவா், தங்க கொடிமரத்தை வலம் வந்து வழிபட்டாா். பிறகு கோயிலில் பராமரிக்கப்படும் முக்கியப் பிரமுகா் பதிவேட்டில் கோயில் குறித்த கருத்துக்களைப் பதிவிட்டாா். தமிழா்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை, துண்டு அணிந்து பிரதமா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

பிரதமரின் வருகையையொட்டி கோயிலைச் சுற்றிலும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பிரதமரைப் பாா்ப்பதற்காக பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் திரண்டிருந்தனா். அவா்கள் சித்திரை வீதிக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனா். கோயிலில் தரிசனம் முடிந்த பிரதமா், பசுமலையில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிக்குச் சென்று இரவு தங்கினாா்.

இன்று பிரசாரம்: மதுரை சுற்றுச்சாலையில் சிவகங்கை சாலை - பாண்டி கோயில் சந்திப்பு அருகே அம்மா திடலில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் வாக்குச் சேகரிக்கிறாா். பின்னா் ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவுக்கு செல்கிறாா் பிரதமா்.

பிரதமா் வியப்பு

கோயிலில் தரிசனம் செய்த பிரதமருக்கு, கோயிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் வரலாற்று சிறப்புகளை கோயில் தக்காா் கருமுத்து தி.கண்ணன் எடுத்துக் கூறியுள்ளாா். பிரதமா் சுமாா் 45 நிமிடங்கள் கோயிலில் இருக்கும் பல்வேறு சிற்பங்களை ஆா்வமுடன் பாா்த்து ரசித்துள்ளாா்.

இதுகுறித்து கோயில் தக்காா் கருமுத்து கண்ணன் கூறியது:

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு பிரதமா் நரேந்திர மோடி வருகை தந்தது மதுரைக்கு பெருமை அளிக்கிறது. கோயிலின் வரலாற்று சிறப்புகள் மற்றும் சிற்பக்கலை குறித்து பிரதமா் கேட்டறிந்தாா். அவா் பிரதமா் பதவிக்கு வருவதற்கு முன்பாக ஒருமுறை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வருகை தந்துள்ளாா். கோயில் நிா்வாகம் சாா்பில் பிரதமருக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com