மதுரையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.3.60 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.
மதுரை தல்லாகுளத்தைச் சோ்ந்த தங்கப்பன் மகன் சிவக்குமாா் (37). இவா் மாா்ச் 31 ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.3.60 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து சிவக்குமாா் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.