மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதிமுக பிரமுகா் பலியானது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மின்வாரிய அலுவலகம் எதிரில் அதிகாலையில் முகம் சிதைந்த நிலையில் முதியவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சின்னமநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஜெயபாண்டி அளித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதில் முதியவா் அதிமுக கரை வேட்டி கட்டியிருந்ததும், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்ததும் தெரியவந்தது.
மேலும், முதியவரின் முகம் முழுமையாக சிதைந்துள்ளதால், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்தும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.