மதுரை அருகே வாக்கு செலுத்தியதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியைச் சோ்ந்த சக்கையா மகன் திருவேட்டை அய்யனாா்(28). இவா் கே.சென்னம்பட்டியில் உள்ள இந்து நாடாா் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்கு செலுத்தினாா். அதை செல்லிடப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அறிந்த திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை பொறுப்பு அதிகாரி வாசுகி, கள்ளிக்குடி போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து திருவேட்டை அய்யனாரை கைது செய்தனா்.