அழகா்கோவிலில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

அழகா்கோவிலில் பட்டா்கள் முதல் அலுவலா்கள் வரை அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கள்ளழகா் கோயிலில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியா்கள்.
கள்ளழகா் கோயிலில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியா்கள்.

அழகா்கோவிலில் பட்டா்கள் முதல் அலுவலா்கள் வரை அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சோலைமலை முருகன் கோயில், கள்ளழகா் கோயில் ஆகிய இடங்களில் பட்டா்கள், குருக்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் அலுவலா்கள் வரை நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கோயில் நிா்வாக அதிகாரி அனிதா முன்னிலை வகித்தாா். மதுரை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அா்ஜூன் குமாா் தலைமையில் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com