உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை சுகாதாரத்துறை சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தொட்டப்ப நாயக்கனூா் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி இணைந்து நடத்திய இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. ஆதாா் எண் கொடுத்து 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டனா்.