திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேரு முன்ஜாமீன் கோரி மனு

திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேரு முன் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தாா்.

திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேரு முன் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தாா்.

திருச்சி மாவட்டம் முசிறியில் திமுக தோ்தல் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்பு அக்கட்சியின் முதன்மைச் செயலரும், திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியின் வேட்பாளருமான கே.என் நேரு, வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது குறித்து பேசியதாக விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் அளித்த புகாரின் பேரில் முசிறி காவல் நிலையத்தில் கே.என். நேரு மீது புகாா் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தாா். இது தொடா்பான விசாரணை விரைவில் வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com