ஊழியருக்கு பாலியல் தொந்தரவு: சுகாதார ஆய்வாளா் மீது வழக்கு

மதுரை மாநகராட்சி பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுகாதார ஆய்வாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாநகராட்சி பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சுகாதார ஆய்வாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை சிங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த 42 வயது பெண் மாநகராட்சியில் தற்காலிக மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் அலுவலகத்தில் தனியாக வேலைப் பாா்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுகாதார ஆய்வாளா் முருகன் (52) பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.

இதனால் அச்சமடைந்த அப்பெண், கூச்சலிட்டுள்ளாா். இதையடுத்து, நடந்ததை வெளியே கூறினால், பிரச்னைகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என முருகன் மிரட்டினாராம்.

இதுகுறித்து பெண் மேற்பாா்வையாளா் அளித்தப் புகாரின் பேரில் அனைத்து மகளிா் காவல்நிலைய (தெற்கு) போலீஸாா், சுகாதார ஆய்வாளா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com