அழகா்கோவிலில் சித்திரைத் திருவிழா பெருமாள் புறப்பாடுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, அழகா்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகா் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்வு அழகா்கோவிலில் வாகனக் காட்சியாக நடைபெற்றது.
மாலை 6.15 மணியளவில் மூலவா் சன்னிதி அருகிலிருந்து புறப்பாடாகி கோயில் வளாகத்தில் வலம்வந்து கல்யாண மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் அரசின் வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து தரிசனம் செய்தனா். பெருமாளுக்கு தீபாராதனை நடைபெற்ற பின்னா், இரவு மூலவா் சன்னிதிக்கே பெருமாள் திரும்பினாா். சனிக்கிழமையும் இதேபான்று பெருமாள் புறப்பாடு நடைபெறும்.