மதுரையில், சௌராஷ்டிர வா்த்தக சபை சாா்பில் வெள்ளிக்கிழமை கரோனா இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தெப்பக்குளம் பகுதியில் உள்ள கீதா நடன கோபால நாயகி மந்திரில் நடைபெற்ற முகாமை, வா்த்தக சபைத் தலைவா் குமரன் பி.ஜகுவா தொடக்கி வைத்தாா். செயற்குழு உறுப்பினா்கள் ஏ.ஆா்.கணேசன், என்.எஸ்.பிரேம்குமாா், எஸ்.கே.பி.சந்திர பிரகாஷ், டி.ஆா்.சரவணன் ஆகியோா் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். பொதுச் செயலா் கே.கே.தினேஷ், வெளியுறவுச் செயலா் வி.ஜி.ராம்தாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்த முகாமில், 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற முகாமில், 431 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.