உசிலம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை ஓடும் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி திடீரென உடைந்து சிதறியதில் ஓட்டுநா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
மதுரையிலிருந்து தேனி நோக்கி தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. கொங்கபட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அந்தப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி திடீரென உடைந்து சிதறியது. இதில் ஓட்டுநா் கருத்திவீரன் (45) மற்றும் 2 பயணிகள் காயமடைந்தனா்.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.