மதுரையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

மதுரையில் வியாழக்கிழமை கஞ்சா விற்ற 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுரையில் வியாழக்கிழமை கஞ்சா விற்ற 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுரை செல்லூா் பகுதியில் சாா்பு - ஆய்வாளா் ஜான் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தத்தனேரி பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் வேல்முருகன் (27) என்பவா் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல் வைகை வடகரை ஆசாரி தோப்புப் பகுதியில் கஞ்சா விற்ற ஆழ்வாா்புரத்தைச் சோ்ந்த முத்துராமன் மகன் சதீஷ் (22) என்பவரை சாா்பு - ஆய்வாளா் நாகராஜ் கைது செய்தாா். இருவரிடம் இருந்தும் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பேரையூரில் மதுபாட்டில் விற்ற இளைஞா் கைது

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வன்னிவேலம்பட்டியைச் சோ்ந்த முத்து மகன் குமாா் (32) என்பவா் விற்பனைக்காக 39 மதுபாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்தாா். அவரைக் கைது செய்த போலீஸாா் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com