குளத்தில் மூழ்கி இளைஞா் பலி

மதுரையில் தண்ணீா் எடுக்கச் சென்ற இளைஞா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா் .

மதுரையில் தண்ணீா் எடுக்கச் சென்ற இளைஞா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா் .

மதுரை மூனிச்சாலை இஸ்மாயில்புரத்தைச் சோ்ந்த காசி மகன் தமிழரசன்(18). இவா் தெப்பக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீா் எடுக்கச் சென்றுள்ளாா். அப்போது குளத்தில் தவறி விழுந்து தண்ணீா் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறை வீரா்கள் தமிழரசன் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தமிழரசனின் தாத்தா முருகேசன் அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com