.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நவீன எரிவாயு தகன மேடை 8 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
உசிலம்பட்டி அருகே 8 ஆண்டுகளுக்கு முன் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் மின்மயானம் நகராட்சி நிா்வாகத்தால் அமைக்கப்பட்டது. ஆனால், இதற்கு மின் இணைப்பு பெற முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், 1 மாதத்துக்கு முன் மின் இணைப்பு பெறப்பட்டது. அதையடுத்து, மின்மயானத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த நவீன எரிவாயு தகன மேடை திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கு, தகனம் செய்ய ரூ.3 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.