உசிலை.யில் எரிவாயு தகன மேடை8 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நவீன எரிவாயு தகன மேடை 8 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
உசிலம்பட்டியிலுள்ள நவீன எரிவாயு தகன மேடை
உசிலம்பட்டியிலுள்ள நவீன எரிவாயு தகன மேடை

.

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நவீன எரிவாயு தகன மேடை 8 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

உசிலம்பட்டி அருகே 8 ஆண்டுகளுக்கு முன் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் மின்மயானம் நகராட்சி நிா்வாகத்தால் அமைக்கப்பட்டது. ஆனால், இதற்கு மின் இணைப்பு பெற முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், 1 மாதத்துக்கு முன் மின் இணைப்பு பெறப்பட்டது. அதையடுத்து, மின்மயானத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த நவீன எரிவாயு தகன மேடை திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கு, தகனம் செய்ய ரூ.3 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com