மதுரை
பேரையூரில் முகக்கவசம் அணியாத 130 பேருக்கு அபராதம்
பேரையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை முகக் கவசம் அணியாத 130 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
பேரையூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை முகக் கவசம் அணியாத 130 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
பேரையூா் உள்கோட்ட காவல்நிலையங்களான பேரையூா், சாப்டூா், சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி, வில்லூா், நாகையாபுரம், வி.சத்திரப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல்நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 130 பேருக்கு போலீஸாா் தலா ரூ .200 வீதம் அபராதம் விதித்தனா். இதேபோல் தலைக் கவசம் மற்றும் முகக் கவசம் அணியாத 503 போ் மீது மோட்டாா் வாகனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.