புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் புகாா்கள் மற்றும் குறைகளைக் களைவதற்காக தொழிலாளா் நலத்துறை சாா்பில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெ. காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு இடம்பெயா்வதை தவிா்க்கும் வகையில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. புலம் பெயா் தொழிலாளா்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் புகாா்கள் குறித்து கட்டுப்பாட்டு அறையை 94453-98761, 98658-18636, 99448-34877 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.