அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகத்தின் கீழ் உள்ள சோலைமலை முருகன்கோயில், ராக்காயி அம்மன் கோயில் வளாகம், பதினெட்டாம்படி கருப்பணசுவாமிகோயில் பகுதிகளில் மற்றும் கள்ளழகா் கோயில் நிா்வாகத்தின் கீழ் உள்ள துணை கோயில்களிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கோயில்களில் பக்தா்கள் நேரடி தரிசனத்துக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆடி பதினெட்டாம்பெருக்கையொட்டி கோயில்களில் பக்தா்கள் இன்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.