உசிலம்பட்டி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மேக்கிழாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி ஜெயலட்சுமி (45), காய்கனி வியாபாரம் செய்து வந்தாா். இவரது மகள் அனுசியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டாா். இதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை காலையில் ஜெயலட்சுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து உசிலம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.