திருவாதவூா் அருகேயுள்ள மாணிக்கம்பட்டியில் உள்ள மதயானை ஈஸ்வரா், இருவாத்தாள் கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பின்னா் வியாழக்கிழமை நடைபெற்றது.
மிகவும் தொன்மைவாய்ந்த இக்கோயில் திருவாதவூா் மற்றும் கொட்டகுடி கிராமத்தில் வசிக்கும் உறவின் முறையினரால் கட்டப்பட்டது. 50 ஆண்டுகளுக்குப் பின்னா் இக்கோயில் வழிபாட்டு உறவின்முறையினா் இணைத்து திருப்பணிகளை மேற்கொண்டனா். ஐந்து நாள்கள் யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியாா்கள் நடத்தினா். வியாழக்கிழமை காலை புனிததீா்த்தக் கும்பங்கள் கோயிலின் மேல் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.