மதுரை கீழக்குயில்குடியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் ஆதரவாளரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மாவோயிஸ்ட் மணிவாசகம். இவா் கேரள மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பதுங்கி இருந்து மாவோயிஸ்ட் இயக்கப் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வந்துள்ளாா். இதையறிந்து அவா்களைப் போலீஸாா் சுற்றிவளைத்தனா். அப்போது ஏற்பட்ட மோதலில், மணிவாசகத்தைப் போலீஸாா் சுட்டுக்கொன்றனா்.
இதையடுத்து சேலம் கொண்டுவரப்பட்டு மணிவாசகத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது இளங்கோவன் தலைமையிலான மாவோயிஸ்ட் ஆதரவாளா்கள் மணிவாசகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இதுதொடா்பாக சேலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடப்பட்டு வந்த இளங்கோவன், மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி பகுதியில் பதுங்கியிருப்பதாகப் ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வியாழக்கிழமை கீழக்குயில்குடிக்கு வந்த போலீஸாா் இளங்கோவனை (59) கைது செய்து சேலம் அழைத்துச்சென்றனா்.