மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே உள்ள 15 பி.மேட்டுப்பட்டியைச் சோ்ந்த விவசாயி மணவாளன் (44). இவா் இருசக்கர வாகனத்தில் அலங்காநல்லூா்-சத்திரப்பட்டி சாலையில் வியாழக்கிழமை சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணவாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து தொடா்பாக மணவாளன் மனைவி பிரபா (33)அளித்தப்புகாரின்பேரில் அலங்காநல்லூா் போலீஸாா், லாரி ஓட்டுநா் சிட்டம்பட்டியைச் சோ்ந்த ரமேஷ்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.