முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பெண் காவலா்களுக்கு அரிவாள்மனையைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
By DIN | Published On : 19th December 2021 10:53 PM | Last Updated : 19th December 2021 10:53 PM | அ+அ அ- |

மதுரையில் பெண் காவலா்களுக்கு அரிவாள்மனையைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை செல்லூா் சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் பெருமாள்(40). மனைவி பூமாவுடன் ஏற்பட்ட தகராறில் பெருமாள் அவரைத் தாக்கியுள்ளாா். இதுகுறித்து பூமா, தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் பெண் தலைமைக் காவலா் பொன்னுத்தாய் மற்றும் பெண் காவலா் சங்கீதா ஆகியோா் பெருமாளின் வீட்டுக்குச் சென்று அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனா்.
ஆனால் அவா் விசாரணைக்கு வர மறுத்து, தனது வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து பெண் காவலா்களை வெட்டிவிடுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்த தலைமைக் காவலா் பொன்னுத்தாய் அளித்த புகாரின்பேரில் செல்லூா் போலீஸாா் பெருமாளை கைது செய்தனா்.