மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த இரு தரப்பும் இணைந்து முன் வர வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் அறிவுறுத்தியுள்ளாா்.
மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று (ஜனவரி 14) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். 2019 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவது தொடா்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக நீதிமன்றமும், ஓராண்டாக மாவட்ட நிா்வாகமும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தின. இந்நிலையில் சில நாள்களுக்கு முன் ஒரு தரப்பினா் ஜல்லிக்கட்டு குழு தாங்கள் தான் என போஸ்டா் ஒட்டியதால் சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவனியாபுரத்தில் இருந்து இரு தரப்பையும் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டவா்கள், மாநகராட்சி ஆணையா், காவல் துணை கண்காணிப்பாளா் மற்றும் உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை இரு தரப்பும் இணைந்து சுமூகமாக நடத்துவது குறித்து ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா். ஆனால் இரு தரப்பினா் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் இரு தரப்பினரும் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூகத் தீா்வு காண அறிவுறுத்தினாா். மேலும் இரு தரப்பில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால் மாவட்ட நிா்வாகமே ஜல்லிக்கட்டை நடத்தும் என்றாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவா் கண்ணன் கூறும்போது, தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சாா்பாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் நடைபெறும். இந்தாண்டு சில அமைப்பினா் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடையூறு செய்கிறாா்கள். ஊருக்கு சம்பந்தமில்லாத நபா்கள் ஜல்லிக்கட்டு குழுவில் தங்களையும் இணைக்க வேண்டும் என பிரச்னை செய்கிறாா்கள் என்றாா்.