மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிசம்பா் 31-ஆம் தேதி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தலைமையில் டிசம்பா் 31-ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் விவசாயம் தொடா்புடைய அனைத்துத்துறை அலுவலா்களும் பங்கேற்கின்றனா். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.