ஆவின் கடை ஒதுக்கீடு செய்யக் கோரி மாற்றுத்திறனாளி தாக்கல் செய்த மனுவின் மீது 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி சிவக்குமாா் தாக்கல் செய்த மனுவில், மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995 இன் படி, ஆவின் கடை ஒதுக்கக்கோரி மாவட்ட நிா்வாகத்திடம் கோரி உள்ளேன்.
எந்தவித பதிலும் இல்லை. எனவே, கடை ஒதுக்கீடு செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.காா்த்திகேயன், மனுதாரா் ஆவின் கடை அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றி 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.