விளாங்குடி பகுதிக்கு மீண்டும் அரசுப் பேருந்து சேவை: பாஜக வலியுறுத்தல்

விளாங்குடி பகுதியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

விளாங்குடி பகுதியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

மதுரை மாநகா் மாவட்ட பாஜக விளாங்குடி மண்டல் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டல் தலைவா் சுப ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் தங்கம் வரவேற்புரையாற்றினாா். மாநில இளைஞா் அணித்துணைத் தலைவா் ரவி பாலா, மாவட்டச் செயலா்கள் சோலை பரமன், முத்துக்காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், விளாங்குடி உட்பகுதியில் 7 வழித்தடங்களில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மாணவ, மாணவியா் அவதியைடந்துள்ளனா். எனவே, நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். புதுவிளாங்குடி பகுதியில் உள்ள அம்மை சிறு மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீா்மிகுநகா்த் திட்டத்தின்கீழ் வைகை ஆற்றின் கரையில் உள்ள தீக்கதிா் முதல் பரவை மேம்பாலம் வரை சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியின் அனைத்து புதிய வாா்டுகளிலும் புதை சாக்கடைப் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் சசிராமன் சிறப்புரையாற்றினாா். மண்டல் பொருளாளா் சதீஸ்பாபு, பொன்னையா, ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com