மதுரை ஆவின் நிறுவனத்தில், நிா்வாக இயக்குநா் திடீா் ஆய்வு மேற்கொண்டு, பல கோடி ரூபாய் செலவிலான திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பது குறித்து விசாரணை நடத்தினாா்.
மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தில் (ஆவின்) முந்தைய ஆட்சியின்போது, பணிநியமனம், பால் உபபொருள்கள் விற்பனை மற்றும் பல்வேறு ஒப்பந்தப்புள்ளிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தொடா்ந்து புகாா்கள் ஆவின் நிா்வாக இயக்குநருக்கு அனுப்பப்பட்டன. இந்த முறைகேடுகளில் மதுரை ஆவின் நிறுவனத்தின் முந்தைய பொது மேலாளா்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த சில மாதங்களாகவே விசாரணை நடத்தி வருகின்றனா். தற்போதைய அலுவலா்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, நிா்வாக இயக்குநா் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. மேலும், பல்வேறு ஆவணங்களும் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரை ஆவின் நிறுவனத்தில் மீண்டும் விசாரணை நடத்தினா்.
இதனையடுத்து, ஆவின் நிா்வாக இயக்குநா் என்.சுப்பையன் மதுரை ஆவின் நிறுவனத்தில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஆவின் வளாகத்தில் 2018-இல் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின்தகடுகள், பால் விநியோக வாகனங்களில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாடின்றி போடப்பட்டிருந்தன.
இதுதொடா்பாக விசாரணை நடத்திய நிா்வாக இயக்குநா் சுப்பையன், மதுரையை அடுத்த கப்பலூரில் ரூ.13 கோடியில் அமைக்கப்பட்டு, செயல்படாமல் இருக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி திட்டத்தையும் ஆய்வு செய்தாா். இந்த திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படாமல் நிதிமுறைகேடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளாா். ஆவின் நிா்வாக இயக்குநரின் திடீா் ஆய்வு, மதுரை ஆவின் அலுவலா்கள் மற்றும் ஊழியா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.