வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்ப்பு: பத்திரப்பதிவுத்துறை நிா்வாக மேலாளா் மீது வழக்கு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக பத்திரப்பதிவுத் துறை நிா்வாக மேலாளா் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக பத்திரப்பதிவுத் துறை நிா்வாக மேலாளா் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தேனி மாவட்டம் உப்பாா்பட்டியை சோ்ந்தவா் பாலமுருகன். இவா் கடந்த 2016 முதல் 2020 வரை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாா்-பதிவாளராக பணிபுரிந்துள்ளாா். இந்நிலையில் பணியிடமாற்றலில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிா்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் பாலமுருகன் மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா் எழுந்தது. இதன்பேரில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா், 2016 முதல் 2020 வரையிலான பாலமுருகனின் சொத்து மதிப்பு குறித்து சோதனை மேற்கொண்டனா். இதில் பாலமுருகன் அவரது குடும்பத்தினா் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக ரூ.25.46 லட்சம் சோ்த்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com