அரசு வேலை கிடைக்காததால் இளம் பெண் தற்கொலை
By DIN | Published On : 06th February 2021 08:35 AM | Last Updated : 06th February 2021 08:35 AM | அ+அ அ- |

மதுரை அருகே அரசு வேலை கிடைக்காததால் இளம் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
சிவகங்கை மாவட்டம் வீரலட்சுமிபுரத்தைச் சோ்ந்த ரவி மகள் மாரதை (24). பட்டதாரியான இவா், அரசு வேலைக்காக போட்டி தோ்வுகளை எழுதி வந்தாா். ஆனால் போட்டித் தோ்வில் தோ்ச்சி பெற முடியாததால் அரசு வேலை கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவா் எழமனூரில் உள்ள அவரது வீட்டில் ஜனவரி 27 ஆம் விஷம் அருந்தியுள்ளாா்.
அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மாரதை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தந்தை ரவி அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.