மதுரை-சென்னை தேஜஸ் அதிவிரைவு ரயில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக தேஜஸ் ரயில் இயக்கப்படாமல் இருந்தது. பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு ரயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டவுடன், தேஜஸ் ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்தவில்லை என தேஜஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் அந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை-சென்னை தேஜஸ் அதிவிரைவு ரயில் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் கொடைரோடு ரயில் நிலையத்திற்குப் பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 6 மாதங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் நின்று செல்லும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.