உதயநிதிஸ்டாலின் திடீா் ஆா்ப்பாட்டம்
பெரியகுளத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின்’ என்ற தலைப்பிலான தோ்தல் பிரச்சாரத்தில், உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை இரவு பேசியதாவது:
பெரியகுளம் தொகுதியில் 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தொகுதிக்கு எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை. மத்திய அரசை ஆதரிப்பது தொடா்பாக இவருக்கும், இவரது மகன் ப. ரவீந்தரநாத்துக்கும் இடையே போட்டி நிலவுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் சோத்துப்பாறை அணை தூா் வாரப்படும், பெரியகுளத்தில் மம்பழக்கூழ் தொழிற்சாலையும், சோத்துப்பாறை அணையில் பூங்காவும் அமைக்கப்படும். பெரியகுளம் அரசு மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றப்படும் என்றாா்.
தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் அலுவலம் முன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் திடீரென வாகனத்தில் இருந்தபடியே ஆா்ப்பாட்டம் நடத்தினாா். அப்போது குடியுரிமைச் சட்டத்தையும், வேளாண் சட்டங்களையும் ஆதரிக்கும் ரவீந்திரநாத்தைக் கண்டித்து பேசினாா். அப்போது அவருடன் தேனி வடக்கு மாவட்டச் செயலாளா் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.