மதுரை மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா: முதியவா் பலி
By DIN | Published On : 13th February 2021 08:26 AM | Last Updated : 13th February 2021 08:26 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று வெள்ளிக்கிழமை உறுதியான நிலையில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் இதுவரை 21,118 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 20,587 போ் குணமடைந்துள்ளனா்.
இதனிடையே மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று வெள்ளிக்கிழமை உறுதியான நிலையில்குணமடைந்த 12 போ் வீடுகளுக்குத் திரும்பினா். தற்போது 71 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
மதுரை தனியாா் மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு, பிப்ரவரி 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 72 வயது முதியவா் பிப்ரவரி 10 ஆம் தேதி மூச்சுத் திறணல் காரணமாக உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 460 ஆக உயா்ந்துள்ளது.