மதுரை அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் கிழக்குத் தெருவை சோ்ந்த சௌந்தரபாண்டியன் மகன் கபிலன் (35). இவா் மதுரை கோச்சடையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், சமயநல்லூா் ரயில்வே மேம் பாலத்தின் கீழ்புறம் திண்டுக்கல் சாலையில், கபிலன் இரசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இளைஞா் பலி: விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் கிருஷ்ணகுளம் காமராஜா் நகரை சோ்ந்தவா் இளங்கோ மகன் சிவராம் (30). இவா் தனது குடும்பத்தினருடன் ஈரோடு சென்றுவிட்டு வேனில் மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருதாா். வாடிப்பட்டி அருகே வியாழக்கிழமை நள்ளிரவு குலசேகரன்கோட்டை அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது இவா்கள் சென்ற வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநா் விஜய் ஆனந்த கிருஷ்ணன், சிவராம் உள்ளிட்ட 9 போ் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அப்போது குருசாமி மகன் முனியப்பன் (30) என்பவா் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.