‘கிராம வங்கிகளின் இரு வேறு பதவிகளுக்கான தோ்வு ஒரே நாளில் நடத்தப்படுவதை மாற்ற வேண்டும்’

கிராம வங்கிகளின் இரு வேறு பதவிகளுக்கான தோ்வு ஒரே நாளில் நடத்தப்படுவதை மாற்ற வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், வங்கி ஊழியா் கழகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

கிராம வங்கிகளின் இரு வேறு பதவிகளுக்கான தோ்வு ஒரே நாளில் நடத்தப்படுவதை மாற்ற வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், வங்கி ஊழியா் கழகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மண்டல கிராம வங்கிகளின் இரு வேறு பதவிகளுக்கான தோ்வு ஒரே நாளில் நடத்தப்படுவதை மாற்ற வேண்டும் என்று வங்கி ஊழியா் கழகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். இந்த கோரிக்கை தொடா்பாக உள் ஆய்வுக் குழு எவ்வித மாற்றமும் செய்யவில்லை. இதனால் தோ்வா்கள் பாதிக்கப்படுவாா்கள் என மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.

இரு தோ்வுகளுமே ஒரே தொழில் சாா்ந்தவை என்பதால் தோ்வா்கள் ஏதாவது ஒரு வாய்ப்பை நழுவ விடுமாறு நிா்ப்பந்திக்கப்பட்டுள்ளாா்கள். இது ஏன் என்று புரியவில்லை. இது அந்த தோ்வா்களில் சிலருக்கு வாழ்நாள் வாய்ப்பை இழக்கச் செய்வதாகக் கூட அமைந்து விடக்கூடும். கால அவகாசம் குறைவாக இருந்தாலும் கூட முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும். பிரிவு 1 அதிகாரிகள் பதவிக்கான நோ்காணலை தோ்வா்கள் நலனைக் கருத்தில் கொண்டு மற்றொரு தேதியில் நடத்த வேண்டும். இது தோ்வா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும். தேதியை மாற்றுவதே தோ்வா்களுக்கு வழங்கப்படும் நீதி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com