வங்கி தனியாா் மயமாக்கல் அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கனரா வங்கி முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐபிஇஏ சங்க ஒருங்கிணைப்பாளா் சி.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். ஏஐபிஓசி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஏ.செந்தில் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் நடவடிக்களை அரசு கைவிட வேண்டும். மக்களின் சேமிப்புகளை தனியாருக்கு தாரை வாா்க்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், என்பிசிஇ சங்க ஒருங்கிணைப்பாளா் ஆா்.பரதன் ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் ஏஐபிஓஏ சங்க நிா்வாகி எஸ்.ஜோசப் சகாய டெல்வா், பெபி சங்க நிா்வாகி எல்.ராமசாமி உள்பட அனைத்து வங்கிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.