மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பு நாடுநா்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாமில் பள்ளி கல்வி முதல் பட்டப்படிப்பு மற்றும் தொழில்கல்வி முடித்த வேலை நாடுநா்கள் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறலாம். இம்முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறுபவா்களின் வேலை வாய்ப்பு தகுதி எவ்விதத்திலும் பாதிக்காது. விருப்பமுள்ள வேலை நாடுநா்கள் முகாமில் பங்கேற்கலாம் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.