தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் நடத்திய மாநில அளவிலான மாற்றித்திறளாளிகளுக்கான ஓட்டப் பந்தயத்தில் சரசுவதி நாராயணன் கல்லூரி மாணவா் தங்கப் பதக்கம் வென்றாா்.
கோவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கம் சாா்பில் மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான 16 ஆவது சீனியா் விளையாட்டுப் போட்டி கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை மூன்றாம் ஆண்டு மாணவா் மு.முத்துப்பாண்டி பாா்வையற்றோருக்கான பிரிவில் 400 மீட்டா் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று முதலிடத்திலும், 100 மீட்டா் பிரிவில் வெங்கலப்பதக்கம் வென்று 3ஆம் இடத்திலும் வெற்றிபெற்றாா்.
வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி முதல்வா் மு.கண்ணன், துணை முதல்வா் கு.கிருஷ்ணன், வரலாற்றுத்துறை தலைவா் ரவிச்சந்திரன், உடற்கல்வி இயக்குநா் யுவராஜ் ஆகியோா் பாராட்டி பரிசளித்தனா்.